பொன்னந்தி மாலை வானவிலின்
வர்ண வளைவில் கண் கூசா
மெல்லொளியாய் வந்திறங்கினாய்...!
கருமை மிகு மேல் வானின்
மின்னற் கொடியின்
இழையொன்றைப் பற்றி யிறங்கி,
காத்திரமாய் வேர்விட்டு
பெருமரமாய்ச் செழித்திட்டாய்...!
அடர் இருள் நெஞ்சத்துள்
விழி வழி புகுந்தே
வெளிச்சமும், வளியும் கொள்
மனையாக்கி சாளரங்கள்
வழி உயிர் கொடுத்து.....
தண்மதிக்காய் ஏங்கிய
அல்லியை முகிழச் செய்தாய்....!
மனதால் உன்னுடன் முயங்கி
விழி களைத்துக் கிடந்த நாளில்,
காரணம் கூறாது,
நினைவடுக்குகளை அழிக்காது
சாளரவழியே பூனையாய்க்
குதித்தோடி விட்டாய்...
இதயச் சுவரெங்கும்
நகக் கீறல்கள்
இருள் கவிகிறது மனக் காடெங்கும்......!
Thursday, August 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//பொன்னந்தி மாலை வானவிலின்//
முதல் வரியில் கடைசி வார்த்தை வானவில்லின் என்றிருக்க வேண்டும்...
அதை விடுத்து பார்த்தால், கவிதை களை கட்டுகிறது....
அதிலும் அந்த கடைசி பாரா.... ஆஹா... மனதுள் அப்படியே மழை தூறலின் மெல்லிய இழை போல், மெலிதாக வழிந்தோடி உடல் / மனமெங்கும் ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது...
மிக மிக பரவசமான வாசிப்பானுபவத்தை ஏற்படுத்திய ஒரு பதிவு...
வாழ்த்துக்கள் மன்சுபாஷினி....
மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது தங்கள் பின்னூட்டத்தால்.... அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...!
அழியா அன்புடன்
மஞ்சுபாஷினி
Post a Comment