skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Thursday, August 12, 2010

பெண்ணே நீ போனதெங்கே.?

பொன்னந்தி மாலை வானவிலின்
வர்ண வளைவில் கண் கூசா
மெல்லொளியாய் வந்திறங்கினாய்...!
கருமை மிகு மேல் வானின்
மின்னற் கொடியின்
இழையொன்றைப் பற்றி யிறங்கி,
காத்திரமாய் வேர்விட்டு
பெருமரமாய்ச் செழித்திட்டாய்...!

அடர் இருள் நெஞ்சத்துள்
விழி வழி புகுந்தே
வெளிச்சமும், வளியும் கொள்
மனையாக்கி சாளரங்கள்
வழி உயிர் கொடுத்து.....
தண்மதிக்காய் ஏங்கிய
அல்லியை முகிழச் செய்தாய்....!

மனதால் உன்னுடன் முயங்கி
விழி களைத்துக் கிடந்த நாளில்,
காரணம் கூறாது,
நினைவடுக்குகளை அழிக்காது
சாளரவழியே பூனையாய்க்
குதித்தோடி விட்டாய்...
இதயச் சுவரெங்கும்
நகக் கீறல்கள்
இருள் கவிகிறது மனக் காடெங்கும்......!
Posted by MANCHUBASHINI at 12:57 AM

2 comments:

R.Gopi said...

//பொன்னந்தி மாலை வானவிலின்//

முதல் வரியில் கடைசி வார்த்தை வானவில்லின் என்றிருக்க வேண்டும்...

அதை விடுத்து பார்த்தால், கவிதை களை கட்டுகிறது....

அதிலும் அந்த கடைசி பாரா.... ஆஹா... மனதுள் அப்படியே மழை தூறலின் மெல்லிய இழை போல், மெலிதாக வழிந்தோடி உடல் / மனமெங்கும் ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது...

மிக மிக பரவசமான வாசிப்பானுபவத்தை ஏற்படுத்திய ஒரு பதிவு...

வாழ்த்துக்கள் மன்சுபாஷினி....

August 22, 2010 at 10:01 PM
MANCHUBASHINI said...

மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது தங்கள் பின்னூட்டத்தால்.... அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...!

அழியா அன்புடன்
மஞ்சுபாஷினி

August 30, 2010 at 12:30 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ▼  August (5)
      • மின்னல் போல் மறைந்தனையே..!
      • பிச்சை.
      • வசந்தத்தை நோக்கிய தவம்.!
      • பெண்ணே நீ போனதெங்கே.?
      • ஆடிவேல் நினைவுகள்...!
    • ►  July (3)
    • ►  June (6)
    • ►  May (9)

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio