skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Saturday, August 14, 2010

பிச்சை.

குளிரூட்டி வண்டிக்குள் ஜன்னல்கள் பூட்டி,
“அப்பப்பா, என்ன வெயில்” அலுத்தப்டி
சமிக்ஞையில் தரித்த போதில்
வயதான ஏழையின் கோலம் கண்டு..
மனதையும் பூட்டினேன் இரக்கமற்று.

சிக்கும் சிடுக்குமாய்க் கலைந்த கேசம்
கன்றிக் கறுத்து ஒட்டிய கன்னங்கள்
சிவந்து கலங்கிய பூஞ்சை விழிகள்
வெடித்துக் காய்ந்துலர்ந்த உதடுகள்
நீரின் தீண்டுதலற்ற அழுக்கு உடை
சணலால் இறுக்கப்பட்ட செருப்புகள்
கண் கொண்டு காணவே அச்சப்பட்டு,
அமர்ந்திருந்தேன் எங்கோ பார்த்து.....!

முணுமுணுப்புடன்
அடுத்த வண்டிக்கு நகர்ந்திட
ஜன்னல் இறங்கவில்லை அங்கும்
குரூரமாய் திருப்தியுடன்
விலகிப் போனேன்.
ஆனாலும் ஏழை முகம்
மறையவில்லை மனதை விட்டு,
சிந்தனை சிதறியதால்
ஓர் வழிப்பாதையிலே சென்றதனால்
வழி மறித்த காவலன்
கௌரவமாய்ப்பிச்சை கேட்க
துணுக்குற்றேன் ஏழையின் சாபமென்றே....!

மனச்சாட்சி இல்லா மனிதனென்றே
உள்ளுணர்வு வதைத்திடவே
மீண்டும் கண்டால் கொடுப்பதற்காய்
பழைய துணி, செருப்பு எல்லாம்
எடுத்து வைத்தேன்
மனிதம் தேடி எங்கே போனானோ.....?!
இன்று வரை எங்குமங்கு காணவில்லை.
உடன் செய்யாத் தானம்
உறுத்துதெனை எனை ஏழை மக்கள்
காணுகின்ற போதில் எல்லாம்.....!
Posted by MANCHUBASHINI at 11:04 PM

6 comments:

Esha Tips said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

August 15, 2010 at 11:46 PM
Thenammai Lakshmanan said...

ஆமாம் மஞ்சு எல்லாம்காலம் கடந்த ஞானோதய்ம்..

August 16, 2010 at 11:11 PM
R.Gopi said...

பிரமாதமான நெஞ்சை சட்டென சுடும் நிதர்சனமான வரிகள்....

//உடன் செய்யாத் தானம்
உறுத்துதெனை எனை ஏழை மக்கள்
காணுகின்ற போதில் எல்லாம்.....//

மிக சரியே... தானம் உடன் செய்யவில்லை என்றால், அது மறுபடி செய்ய சிறிது நாள் பிடிக்கும்...

சில சமயம், நம் மனமே அதை விரைந்து வினாடியில் மாற்றி செய்ய விடாமல் தடுத்தும் விடும்...

August 22, 2010 at 9:54 PM
MANCHUBASHINI said...

தமிழ்த் தோட்டம் தங்கள் வரவுக்கு எனதன்பும் நன்றியும்..!

August 30, 2010 at 12:35 AM
MANCHUBASHINI said...

தேனக்கா..... பலவிடயங்களில் இப்படியாகத் தான் மனிதர்கள் நாம் இருந்துவிடுகிறோம்.

வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றிகள்.

August 30, 2010 at 12:36 AM
MANCHUBASHINI said...

மிகச் சரி கோபி, மனம் மிகவிரைவில் மாறிவிடும். நல்லதை நினைத்தவுடன் செய்து முடிக்கா விட்டால், பின்னர் மறையாத குற்ற உணர்வுடன் காலம்கழியும்.

வரவுக்கும், ஊக்கத்துக்கும் என் பணிவன்பான நன்றி.

August 30, 2010 at 12:38 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ▼  August (5)
      • மின்னல் போல் மறைந்தனையே..!
      • பிச்சை.
      • வசந்தத்தை நோக்கிய தவம்.!
      • பெண்ணே நீ போனதெங்கே.?
      • ஆடிவேல் நினைவுகள்...!
    • ►  July (3)
    • ►  June (6)
    • ►  May (9)

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio