செல்லமாய்ச் சிணுங்கிப் பின்
ஆரவாரத்துடன் பெருகிய மழையின்
தளுவலில் பூரித்துப் பூத்த பூமியில்
கிளர்ந்த மணமாய்,வாசம் வீசிடும்
நாம்பேசி முடித்த வார்த்தைகள்....!
எங்கும், எதிலும் சூன்யம் நிறைந்து
தொலைத்து விட்ட பால்யம் தேடி
அலைக்கழிந்திருந்த கணமொன்றில்
தனிமை நீக்கிப் பெருமழையாய்
அன்பைச் சொரிந்தே படர்ந்திட்டாய்
அறுக்கவியலாக் கொடி யானாய்.
சிலிர்த்துச் சிரிக்கும் செடி தாங்க
மண்ணுள் மறைந்த வேரானாய் - என்னை
வேறாய் நினைக்காமல்
மறைந்து நின்று உரமானாய்
வரவு வேண்டிக் காத்திருக்க
மின்னலாய் வந்தாய் ஜன்னல் வழி
இறுகப் பற்றிப் பூட்டி வைத்தேன்
எனக்கே எனக்காய் என்னுள்ளே.....!
உனது வரியில் எனைக் கண்டு
எனது எழுத்தில் உனை யேற்றி
கரையும் நாளைக் கழித்திருந்தேன்,
தேட முடியாப் பெருவெளியில்
மின்னி மறைந்து போனாயே
தொலைத்து விட்டுத் தேம்புகிறேன்
மீண்டும் வருவாய் என நம்பி
காலம் கழித்து வாழ்கின்றேன்........!
Saturday, August 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
மிக நன்று. நீங்கள் கொஞ்சம் மரபின் பக்கம் வரலாமே!
முதன் முதலாக வருகை தருகிறேன்... இப்போ நான் உங்க ஃபாலோயர் கூட....
//தளுவலில் பூரித்துப் பூத்த பூமியில் //
இங்கு தழுவலில் என்றிருக்க வேண்டுமோ!!
//சிலிர்த்துச் சிரிக்கும் செடி தாங்க
மண்ணுள் மறைந்த வேரானாய் - என்னை
வேறாய் நினைக்காமல்
மறைந்து நின்று உரமானாய்//
வாவ்.... நிஜமாகவே சிலிர்க்க வைத்த வரிகள்.. அதிலும், வேர் / வேறு பிரமாதமான சொற்பிரயோகம்.. கலக்கல்...
//தேட முடியாப் பெருவெளியில்
மின்னி மறைந்து போனாயே//
இந்த வார்த்தை கையாளலும் மிக நன்றாக உள்ளது...
வாழ்த்துக்கள் மன்சுபாஷினி.....
நேரமிருப்பின் என் வலைப்பக்கங்களை தரிசிக்க வரலாமே...
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
தியாகு அண்ணா, எனது வலைத் தளத்துக்கு நீங்க வந்தது, மிக்க மகிழ்சியை அளிக்கிறது. தங்கள் வழிகாட்டல் என்னையும், தமிழையும் நிச்சயம் வளர்க்கும்.
அழியா அன்புடன்
மஞ்சு
கோபி வரவுக்கும் இடுகைக்கும் மிக்க நன்றி, உங்கள் வலைத் தளத்துக்கு நிச்சயம் வருகிறேன்...!
அழியா அன்புடன்
மஞ்சுபாஷினி
மஞ்சுபாஷிணி வலைப்பூக்களில் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இன்று அவை என்னை ஈர்க்கவில்லை. காரணங்கள் பல உண்டு. நான் சொல்ல நினைத்து, சொல்லாமல் விடுவதை, இங்கே பொதுவில் சொன்னால், பலர் ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம்; கொள்ளாமலும் போகலாம். சுருக்கமாக சொன்னால், பவர்செண்டர் அரசியல் அதிகமுள்ள இடமாக வலைப்பதிவரங்கினைக் காண்கிறேன். என்னுடைய கருத்து இதுவென்பதற்காக வலைப்பதிவரங்கம் வளராமல் நிற்கப் போவதுமில்லை. அதனதன் வளர்ச்சி அதனதன் வழியில். .
Kalakeetnga Thozhi.........Arumai....Book konjam vegamaha ready pannalamae...
காதலில் காத்திருப்பு என்றுமே ஒரு சுகமான சுமைதான். வார்க்கவியலாத ஏக்கங்களை வார்த்தைகளாக்குவது சற்று கடினமே. அது உங்கள் வரிகளில் கைகூடிவருகிறது.
காதலில் உருகும் மனதுக்கும் இயற்கைக்குமான பந்தம் இக்கவிதை முழுவதும்...
வாழ்த்துக்கள் தோழி.
மிக அருமை தோழி ... நல்ல க-விதைகள்,
ப்ளாக் பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன .வந்த பின் ஒரு நல்ல ப்ளாக் பார்த்த மகிழ்ச்சி
மாதேஸ்வரன்
ermadesh@gmail.com
Doha,Qatar
அருமையான கவிதை....படிப்பதற்க்கு மிக இதமாக இருந்ததது....வாழ்த்துக்கள்
Post a Comment