skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Thursday, August 12, 2010

வசந்தத்தை நோக்கிய தவம்.!

என்றோ வசந்தம்
வருமேயென்ற நினைவு
சுமைகளைக் சுகமாக்க
பிரிவும், துயரும்
ஊசிக் குளிரும், கொடும் கோடையும்
பொருளீட்டலில், பொருட்டாகா....!
நிகழ்காலத்தைத் தொலைத்து
தெரியாத எதிர்காலத்துக்காய்ப்
பந்தயக் குதிரைகளாய்
முழு வேக ஓட்டம்....!

எந்திர மனிதரின்
செயற்கைப் புன்னகை
பதில் வேண்டாத
வெறுமை விசாரிப்புக்கள்,
வீர்யத்துடன் வலிகளைக் கொட்ட
மின்னணு வார்த்தைப் பரிமாறல்கள்,
எங்கோ தொலைத்ததை
எங்கோ தேடி,
சொல்லில் வடிக்கவியலா
வலிகளைச் சுமந்து
கதறியழ வோரிட மேயற்று
உள்ளே அழுது, வெளியே சிரித்து...
வதைபடும் மனதை ஓரமாக்கி......!.

வெயிலில் உருகி
குளிரில் உறையும்
இவனிலையறியா
ஊரவர் சொன்னார்
”அவனுக்கென்ன
அவன் பிள்ளை வெளியூரில்.....!”
Posted by MANCHUBASHINI at 3:56 AM

9 comments:

ராஜா said...

ம்ம் ..அவிங்களுக்கு நாம ஊருக்கு வரும் போது நம்மள வாசனை புடிச்சு பையன் நோகாம
நோட்டள்ளுறான் போலன்னு நினைக்கிறாங்க, அந்த வாசனைக்கு பின்னாடி எவ்வளவு ரோதனை இருக்குனு அந்த திண்ணை நாக்கிற்கு தெரியவா போவுது :(

August 12, 2010 at 4:37 AM
http://rkguru.blogspot.com/ said...

அருமையான கவிதை வரிகள்.....வாழ்த்துகள் தோழி

August 12, 2010 at 4:49 AM
Learn said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

August 14, 2010 at 3:36 AM
R.Gopi said...

ஆஹா....

மத்திய கிழக்கு நாடுகளின் வெயிலில் வதங்கி, வாடி, கரிந்து, நொந்து, பிய்ந்து போகும் மாந்தரின் மன நிலையை அப்படியே தெள்ளத்தெளிவாக கண்ணாடி போல படம் பிடித்து காட்டிய ஒரு அருமையான பதிவு...

வாழ்த்துக்கள் மன்சுபாஷினி....

August 22, 2010 at 9:58 PM
MANCHUBASHINI said...

ராஜா..... வருகைக்கும், பின்னூட்ட இடுகைக்கும் மிக்க நன்றி.

August 30, 2010 at 12:31 AM
MANCHUBASHINI said...

நன்றி குரு.

August 30, 2010 at 12:32 AM
MANCHUBASHINI said...

வரவுக்கு மிக்க நன்றி தமிழ்த் தோட்டம்.

August 30, 2010 at 12:32 AM
MANCHUBASHINI said...

கோபி தங்கள் வரவுக்கும், கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

August 30, 2010 at 12:33 AM
GREEN HOUSE said...

வெயிலில் உருகி
குளிரில் உறையும்
இவனிலையறியா
nice

September 14, 2010 at 7:12 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ▼  August (5)
      • மின்னல் போல் மறைந்தனையே..!
      • பிச்சை.
      • வசந்தத்தை நோக்கிய தவம்.!
      • பெண்ணே நீ போனதெங்கே.?
      • ஆடிவேல் நினைவுகள்...!
    • ►  July (3)
    • ►  June (6)
    • ►  May (9)

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio