என்றோ வசந்தம்
வருமேயென்ற நினைவு
சுமைகளைக் சுகமாக்க
பிரிவும், துயரும்
ஊசிக் குளிரும், கொடும் கோடையும்
பொருளீட்டலில், பொருட்டாகா....!
நிகழ்காலத்தைத் தொலைத்து
தெரியாத எதிர்காலத்துக்காய்ப்
பந்தயக் குதிரைகளாய்
முழு வேக ஓட்டம்....!
எந்திர மனிதரின்
செயற்கைப் புன்னகை
பதில் வேண்டாத
வெறுமை விசாரிப்புக்கள்,
வீர்யத்துடன் வலிகளைக் கொட்ட
மின்னணு வார்த்தைப் பரிமாறல்கள்,
எங்கோ தொலைத்ததை
எங்கோ தேடி,
சொல்லில் வடிக்கவியலா
வலிகளைச் சுமந்து
கதறியழ வோரிட மேயற்று
உள்ளே அழுது, வெளியே சிரித்து...
வதைபடும் மனதை ஓரமாக்கி......!.
வெயிலில் உருகி
குளிரில் உறையும்
இவனிலையறியா
ஊரவர் சொன்னார்
”அவனுக்கென்ன
அவன் பிள்ளை வெளியூரில்.....!”
Thursday, August 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ம்ம் ..அவிங்களுக்கு நாம ஊருக்கு வரும் போது நம்மள வாசனை புடிச்சு பையன் நோகாம
நோட்டள்ளுறான் போலன்னு நினைக்கிறாங்க, அந்த வாசனைக்கு பின்னாடி எவ்வளவு ரோதனை இருக்குனு அந்த திண்ணை நாக்கிற்கு தெரியவா போவுது :(
அருமையான கவிதை வரிகள்.....வாழ்த்துகள் தோழி
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
ஆஹா....
மத்திய கிழக்கு நாடுகளின் வெயிலில் வதங்கி, வாடி, கரிந்து, நொந்து, பிய்ந்து போகும் மாந்தரின் மன நிலையை அப்படியே தெள்ளத்தெளிவாக கண்ணாடி போல படம் பிடித்து காட்டிய ஒரு அருமையான பதிவு...
வாழ்த்துக்கள் மன்சுபாஷினி....
ராஜா..... வருகைக்கும், பின்னூட்ட இடுகைக்கும் மிக்க நன்றி.
நன்றி குரு.
வரவுக்கு மிக்க நன்றி தமிழ்த் தோட்டம்.
கோபி தங்கள் வரவுக்கும், கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
வெயிலில் உருகி
குளிரில் உறையும்
இவனிலையறியா
nice
Post a Comment