skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Thursday, May 27, 2010

நீங்காதுன் நினைவலைகள்....!

சேர்ந்திருந்த காலங்கள்
பனியாய் உருகியதே,
நீண்டிருக்குந் தனிமையதில்
வதைபடுது என் மனமே,

மின்னலென விழி வெட்டி
வீழச் செய்தெனைச் சாம்பலாகிச்
சென்றனையே, மின்னலில்
பிறந்த காட்டுத் தீயிலென்
உயிர் பற்றியெரியுதடி.

ஊருக்குட் புகுந்த சமுத்திரமாய்
ஆக்கிரமித்தவோர் பொழுதில்
கண் சொருகிக் கனாக் கண்டதென்
பேதை மனம் சுருட்டியள்ளிச்
செல்வாயென, கசக்கிப் போட்ட
பாதகியே துருவானதெந்தன் நெஞ்சம்.

உனக்காய் நட்டு வைத்த
மல்லிச் செடி மதாளித்துப்
பூக்குகையில், வெண்பூக்கள்
பார்த்தென்னை ஏளனமாய்ச் சிரிக்குதடி
கொம்பற்ற கொடியாய்
வீழ்த்தினாயே எனை மண்ணில்.

நினைவுகளை அழித்து விட
நிலையான வரம் வேண்டித்
தொழுகின்றேன், ஆனாலும்
தாய்மடி தேடி மீளும் ஆலம் விழுதாய்
வேர் விடுகிறதே பலமாய் என் செய்வேன்...!!!
Posted by MANCHUBASHINI at 11:51 PM

1 comments:

Anonymous said...

nice manchu

June 10, 2010 at 8:41 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ►  August (5)
    • ►  July (3)
    • ►  June (6)
    • ▼  May (9)
      • தவிப்பு....!!!
      • நீங்காதுன் நினைவலைகள்....!
      • கோடை காலம்.
      • தொலைந்தது என் முகமூடி.
      • இப்ப எனக்கு வேணும்..!!!
      • தவமிருக்கிறோம் நாம்.
      • வேண்டும் உன் நட்பு...!
      • நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!
      • கண்ணாடி உறவுகள்...

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio