skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Wednesday, May 12, 2010

வேண்டும் உன் நட்பு...!

திருவிழாவில் தொலைந்திட்ட
குழந்தையாய் நின்றவோர் நாள்,
கரம் பற்றி வழி சேர்த்தாய்
வாழ்த்திடவோர் வார்த்தையில்லை.

அன்பை விலை பேசாக்
காலைச்சுற்றும் குட்டி நாயாய்
சுற்றுமுன் நினைவுகளைப்
பொத்தி வைத்து அசைபோட
சொல்லவொண்ணா இன்பம் பொங்கும்.

வலிகளுக்கோர் வடிகாலாகத்
தோள் கொடுத்தாய் தோழனாக,
உவமையற்ற கவிதை வரியாய்,
பச்சென பதிந்து, மனத்தினிடை
வேரூண்டிச் செழித்திட்டாய்...!

ஆழமான அன்பினாலே
அதட்டிடும் போதில், அருண்டு சுருளுமெனை, அரவணைப்பாய் தாய் போலன்பாய்
ஆயுள் வரை வேண்டுமுந்தன்
ஆத்மார்த்தமான நட்பு...!
Posted by MANCHUBASHINI at 11:01 PM

2 comments:

ஊர்சுத்தி... said...

ஆயுளைத் தாண்டியும் என்றுமிருக்கும் ஆத்மார்த்தமான நட்பு...

பதிவுலகில் சொல் பாதிக்கும் அக்காவிற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்...

May 16, 2010 at 1:19 AM
MANCHUBASHINI said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்...!

May 16, 2010 at 7:29 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ►  August (5)
    • ►  July (3)
    • ►  June (6)
    • ▼  May (9)
      • தவிப்பு....!!!
      • நீங்காதுன் நினைவலைகள்....!
      • கோடை காலம்.
      • தொலைந்தது என் முகமூடி.
      • இப்ப எனக்கு வேணும்..!!!
      • தவமிருக்கிறோம் நாம்.
      • வேண்டும் உன் நட்பு...!
      • நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!
      • கண்ணாடி உறவுகள்...

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio