skip to main | skip to sidebar

க-விதை . . .

உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தால் பிறக்கும் முதல் எழுத்து போன்று .. மனதும்.. மொழியும் சேர்ந்தால் பிறக்கும் விதை.. கவிதை! என் க-விதைகள் இங்கே... உங்களுக்காக!

Monday, May 10, 2010

நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!




ஆழ்துயில் கனவாய்
நிகழ்ந்தவை மறந்திடும்
எத்தனிப்புக்கள் தோல்வியுற,
நினைவுகளின் துரத்தல்களில்
திணறிக் கண்மூடிக் கிடப்பதே
பெரும்பாடாய்.....!

இருள் விழுங்கிச் சிவக்கும்
அதிகாலைச் சூரியனும்,
மணியோசையுடன் போட்டிபோடும்
புள்ளினங்கள் குரலிசையும்,
மண்மணமும், மென் காற்றும்,
மழலையும், மணாளனும்
மட்டுமே போதுமென்று
பல நேரம் மனமெண்ணும்,
பொல்லாத உலகத்தில்
இவைமட்டும் போதாவே.....!

பருவமாற்றப் பட்சிகளை
அலட்சியப் பார்வைகள் சிதைக்கா,
கவனம் யாவும்
முதலைக்கோ, அலைக்கோ
வசப்படாமல் மீளலாகும்...!

வருகையின் தடங்கள் மட்டும்
அழியாமல் சிலகாலம்
இருக்கும், பறவை எழுந்தபின்
கண நேரம் சிலிர்த்து ஆடிடும்
மரக் கிளை போல......!
Posted by MANCHUBASHINI at 11:34 PM

7 comments:

Senthu VJ said...

super akka :)

May 11, 2010 at 12:52 AM
MANCHUBASHINI said...

நன்றி செந்தூ....!

May 11, 2010 at 1:00 AM
Bavan said...

அட.... சொல்லவே இல்ல எப்பல இருந்து பதிவுலகில காலடி வச்சீங்க...

வருக.. வருக..

May 12, 2010 at 11:58 AM
MANCHUBASHINI said...

@ பவன் : 2 நாளைக்கு முந்தித் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது, இருங்க இன்னும் ஒரு தளம் தொடங்கப் போறன் மொக்கைப் பதிவுகளுக்காக மட்டும்.....:)

May 12, 2010 at 10:44 PM
Bavan said...

//இன்னும் ஒரு தளம் தொடங்கப் போறன் மொக்கைப் பதிவுகளுக்காக மட்டும்.....:)//

அட.... நம்ம ஜாதி..:p தொடங்குங்க தொடங்குங்க... எதிர்பார்க்கிறோம்

May 12, 2010 at 10:46 PM
swamynathan said...

realy good job.......supper akka...

May 16, 2010 at 3:32 AM
MANCHUBASHINI said...

மிக்க நன்றி ஸ்வாமி....!

May 16, 2010 at 7:30 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சமீபத்தில் விதைத்தவை!

Loading...

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

வருகையின் தடங்கள் என்றும் அழியாத அன்புடன் என்னுள் . . .

சமீபத்திய பின்னூட்டங்கள்

Loading...

Blog Archive

  • ▼  2010 (23)
    • ►  August (5)
    • ►  July (3)
    • ►  June (6)
    • ▼  May (9)
      • தவிப்பு....!!!
      • நீங்காதுன் நினைவலைகள்....!
      • கோடை காலம்.
      • தொலைந்தது என் முகமூடி.
      • இப்ப எனக்கு வேணும்..!!!
      • தவமிருக்கிறோம் நாம்.
      • வேண்டும் உன் நட்பு...!
      • நினைவுகளில் கரையும் நிகழ்காலம்....!
      • கண்ணாடி உறவுகள்...

Followers

 
Copyright © க-விதை . . .. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio